Skip to main content

பதுவை நகர அந்தோனியார் பேராலயம் , பதுவை, இத்தாலி

 

பதுவை நகர அந்தோனியார் பேராலயம் | பதுவை இத்தாலி | St Anthony Basilica | Italy

பதுவைப் ஊரில் புதுமைகள் செய்து நல்லுரையாற்றி, தவறினை சுட்டிக்காட்டி ஞான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அந்தோனியார். தாயகம் போர்ச்சுக்கல் பிறந்த ஊர் லிஸ்பன் சேர்ந்தது அகஸ்தீனார் மடம் புகுந்தது கப்பூச்சின் சபை விரும்பியது வேத சாட்சியாக ஆனது மறை போதகராக உரிமை கொண்டாடியது பதுவை மாநகர் இவை யாவும் தேவ திருவுளம்.

அவர் பதுவா நகரில் மூன்று ஆண்டுகளே திருத்தொண்டாற்றினார். பதுவா நகர் அவரால் அனைத்துலகப் புகழ் பெற்றது.

அந்தோனியார் கடைசி கால கட்டத்தில் 'நான் இங்குள்ள சகோதரர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை பதுவை தூய மரியன்னை மடம் செல்ல விரும்புகிறேன்'' என்றார். சகோதரர்கள் உடன்படவில்லை. அவரின் அடுத்தடுத்த விண்ணப்பம் அவர்களை உடன்பட வைத்தது. ஒரு வண்டியில் ஏற்றி பதுவா ஊரை நோக்கி விரைந்தனர்.

1231 - ஆம் வருடம் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் நிகழ்ந்தது. அன்று அவருக்கு வயது 36. அந்தோனியார் இறபதற்கு முன்னால் பதுவை நகரச் சிறுவர்களின் வாய்களைத் திறந்தார், அவர்கள் வீதிகளில் அங்குமிங்கும் ஓடி, "தூய பிதா இறந்தார். | அந்தோனியார் இறந்துவிட்டார்!” எனச் சொல்லித் திரும்பினர்.



இறந்த பொழுது பதுவை ஆலயமணிகளும், லிஸ்பன் ஆலயமணிகளும் ஒலித்தன. பாலகர்களின் வாய்மொழியைக் கேட்ட மக்கள் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அதிர்ச்சியுடனும், தாங்க இயலாத மன வருத்தத்துடனும் மடம் சென்றனர்,

தான் இறந்தபின் தன்னைப் பதுவை மடத்துக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கஞ் செய்ய வேண்டுமென்று அந்தோனியார் கூறி இருந்தார்.



ஜூன் மாதம் 17ம் நாள் நல்லடக்கத்துக்காக ஊர்வலமாக எடுத்துச் சென்ற புனிதரின் உடலின் முன் மக்கள் எரியும் திரிஏந்திச் சென்றனர். துறவிகளின் ஆலயத்தில் ஆயர் திருப்பலி நிறைவேற்றிய பின் அடக்கம் நடைபெற்றது.

அந்தோனியார் பிரேதப் பெட்டியைத் தொட்ட பலர் குணமடைந்தனர். ஊமைகள் பேசினர். செவிடர்கள் கேட்டனர். குருடர்கள் பார்வையடைந்தனர். தீராப் பிணிகள் தீர்ந்தன. கேட்டவரங்களை மக்கள் அடைந்தார்கள். அவரின் அடக்க நாளில் இவ்வாறு பல புதுமைகள் நடந்தன.

அந்தோனியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட ஆலயத்தை 1232-ல் மாபெரும் ஆலயமாக கட்டும் பணி தொடங்கப்பட்டது. (இப் பேராலயம் கட்டி முடித்திட 100 ஆண்டுகள் ஆயிற்று) அந்தோனியாரின் முதல் அடக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட பெட்டியினை இங்கு காணலாம்.

இந்த பசிலிகாவில் புனிதரின் கல்லறை,தாடை மற்றும் அவரது நாக்கு உள்ளது.மேலும் பல புனிதரின் அருளிறகங்கள் இந்தபசிளிகாவின் உள்ளில் உள்ள பொக்கிச பகுதயில் உள்ளது.

பதுவை இத்தாலி புனித அந்தோனியார் பசிலிக்கா காணொளி புனித அந்தோனியார் கல்லறை இருக்கும் பேராலயம்



புனித அந்தோனியார் கல்லறை Video 



Comments

Popular posts from this blog

நற்கருணை தயாரிப்பு - பத்து பாவங்கள்

  நமது கத்தோலிக்க விசுவாசத்தின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நற்கருணையில் உயிருடன் திருப்பலியில் எழுந்து வருகிறார் . எவ்வளவு பரிசுத்த தன்மையுடன் நாம் நற்கருணை நாதரை வாங்க வேண்டும் . தகுந்த முன் தயாரிப்புடன் நற்கருணைப் பெற்று கொள்வோம் . இந்த பின்வரும் பத்து பாவங்களை செய்திருந்தால் பாவமன்னிப்பு பெறாமல் நற்கருணை பெற வேண்டாம் . சரியான காரணமின்றி ஓய்வு நாள் திருப்பலி தவறவிட்டால் அல்லது தகுந்த காரணம் இல்லாமல் கடன் திருப்பலி காணாமல் இருந்தால் திருமணத்திற்கு வெளியே ( விபச்சாரம் ), உங்களுடன் ( சுயஇன்பம் ) அல்லது திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் ( திருமணத்திற்கு முந்தைய ) உடலுறவு கொண்டிருந்தால் நற்கருணை இழிவுபடுத்தப்பட்டது ஒரு வருடத்தில் ஒரு முறை கூட குருவிடம் சென்று பாவமன்னிப்பு பெறவில்லை ( இது ஒரு கத்தோலிக்கருக்கு குறைந்தபட்ச தேவை ) பயன்படுத்தப்பட்ட செயற்கை பிறப்பு கட்டுப்பாடு - ஆணுறைகள் , மாத்திரைகள் , திட்டுகள் போன்றவை . கருக்கலைப்பு அல்லது கருவின் எந்தவொரு அழிவுடனும் எந்த வகையிலும் நிதியுதவி அல்லது உதவி செய்திருந்தால் ...

அற்புத அகுஸ்தினார் குழந்தை இயேசு - ஜெர்மனி

ஜெர்மன் நாட்டில் இருக்கிற முனிச் நகரத்தில் மட்டும் ஒரு சிறப்பான பெரிய குழந்தை இயேசு சொரூபம் இருக்கு . அந்தக் குழந்தை இயேசுவை ஒவ்வொரு தடவையும் கிறிஸ்மஸ் அப்பதான் வெளியே எடுத்து வைப்பாங்க . அந்த அதிசய குழந்தை இயேசுவை பற்றி தான் பார்க்கப் போறோம் . இந்த குழந்தை இயேசு சிறப்பும் 1624 அகுஸ்தினார் சபை காரங்க வைத்திருந்த சொரூபம் . அகுஸ்தினார் சபையில் இருந்த குரு ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தை இயேசுவே இரவு எடுத்து கையில் வைத்து தாலாட்டி ஜெபம் பண்ணுவார் . இப்படி யாருக்கும் தெரியாமல் அவர் செஞ்சுகிட்டு வந்தாரு . அப்படி ஒரு நாளு அந்த சொரூபம் தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது அந்த குருவானவர் அந்த உடைந்த துண்டுகளை உள்ள வச்சுட்டு கடவுளிடம் ஜெபம் பண்ணினார் . எப்படியாவது இந்த சொரூபம் திரும்ப பழையபடி வந்துடனும் கடவுளே என்று ஜெபம் பண்ணினார் . கிறிஸ்துமஸ் சமயம் நெருங்கி வந்ததால் சபையில இருக்கிற குருக்கள் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்யணும் . அப்ப அந்த குருவானவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பாவசங்கீர்த்தனம்தில் சொன்னாரு . உடனே குருக்கள் போயி அந்த சொரூபத்தை திறந...