ஜெர்மன் நாட்டில் இருக்கிற முனிச் நகரத்தில் மட்டும் ஒரு சிறப்பான பெரிய குழந்தை இயேசு சொரூபம் இருக்கு .அந்தக் குழந்தை இயேசுவை ஒவ்வொரு தடவையும் கிறிஸ்மஸ் அப்பதான் வெளியே எடுத்து வைப்பாங்க .அந்த அதிசய குழந்தை இயேசுவை பற்றி தான் பார்க்கப் போறோம் .
இந்த குழந்தை இயேசு சிறப்பும் 1624 அகுஸ்தினார் சபை காரங்க வைத்திருந்த சொரூபம். அகுஸ்தினார் சபையில் இருந்த குரு ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தை இயேசுவே இரவு எடுத்து கையில் வைத்து தாலாட்டி ஜெபம் பண்ணுவார் .இப்படி யாருக்கும் தெரியாமல் அவர் செஞ்சுகிட்டு வந்தாரு .அப்படி ஒரு நாளு அந்த சொரூபம் தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது அந்த குருவானவர் அந்த உடைந்த துண்டுகளை உள்ள வச்சுட்டு கடவுளிடம் ஜெபம் பண்ணினார் . எப்படியாவது இந்த சொரூபம் திரும்ப பழையபடி வந்துடனும் கடவுளே என்று ஜெபம் பண்ணினார் .
கிறிஸ்துமஸ் சமயம் நெருங்கி வந்ததால் சபையில இருக்கிற குருக்கள் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்யணும் .அப்ப அந்த குருவானவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பாவசங்கீர்த்தனம்தில் சொன்னாரு . உடனே குருக்கள் போயி அந்த சொரூபத்தை திறந்து பார்த்தாங்க அதிசயமாக அந்த சொரூபம் அப்படியே இருந்தது உடைந்து அதற்கு சாட்சியாக ஒரே ஒரு சின்ன கோடு மட்டும் இருந்தது . அப்ப இருந்து இந்த அதிசய குழந்தை இயேசுவே ஜெர்மனி நகர மக்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியே எடுத்து அகுஸ்தினார் குழந்தை இயேசு என்று வழிபட்டு வந்தார்கள் .
இப்ப அந்த குழந்தை இயேசு சொரூபம் அகுஸ்தினார் சபையில் இருந்து கைமாறி இயேசு சபையில் இடம் அந்த சிற்பம் இருக்கிறது . ஒவ்வொரு தடவையும் கிறிஸ்துமஸ் சமயத்தில் மட்டும்தான் அந்த சொரூபம் வெளியே வரும் மூன்று ராஜாக்கள் திருவிழா முடிஞ்சி அந்த சிற்பத்தை திரும்ப உள்ள வச்சிருவாங்க .
Comments
Post a Comment