Skip to main content

ஜெபமாலை ஜெபிப்போம் - பாகம் 1

மாதாஅம்மா 

 

ஜெபமாலை ஜெபிப்போம். 
இந்த உலகத்தில் திருப்பலிக்கு அடுத்து மிகவும் உன்னதமான ஜெபம் ஜெபமாலை ஆகும். ஜெபமாலை ஜெபிக்க பட வேண்டும்.ஜெபமாலை சொல்லப்பட கூடாது . முழு கவனத்தோடு முடித்தவரை மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் .பக்தியுடன் சொல்லப்படும் ஒரு அருள் நிறைந்த மந்திரத்தால் இந்த உலகையே மாற்றலாம் என்று புனிதர்கள் கூறுகிறார்கள்.முடிந்த வரை பய பக்தியுடன் ஜெபமாலை ஜெபிப்போம். ஜெபமாலை தொடங்கும் முன் தூய ஆவி ஆண்டவர் ஜெபம் ஜெபித்த பின்னர் ஆரம்பிக்கவேண்டும் . பக்தியுடன் ஜெபிக்க புனிதர்கள் மற்றும் காவல் சம்மனசானவரின் உதைவியை கேட்க வேண்டும் . 
 
நம்முடைய பாரம்பரிய முறை படி 153 மணி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.இப்பொது நமக்கு ஒளியின் மறை உண்மைகளும் ஜெபமாலையில் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் சேர்க்கப்பட்டுள்ளது . அதையும் நாம் சேர்த்து ஜெபிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும் 53 மணி ஜெபமாலை மிகவும் சிறிய பலனை தரும். முழு ஜெபமாலை ஜெபிக்கும் போது நமக்கு முழு பலன் கிடைக்கும். இந்த உலகத்தில் சாத்தானின் சோதனைகளை மேற்கொள்ள நமக்கு முழு ஜெபமாலை தான் பலன் கொடுக்கும். புனித பியோ, புனித குழந்தை தெரேசாம்மாள், பாத்திமா புனித சிறுவர்கள் , மரிய மான்போர்ட் போன்றவர்கள் முழு ஜெபமாலை ஜெபித்தவர்கள். 53 மணி ஜெபமாலை சிறுவர்கள் ஜெபமாலை. நாம் முடித்த வரை முழு ஜெபமாலை ஜெபித்து புனிதர்களை போல் முழு பலன் பெற வேண்டும் .
 
 அருள் நிறைந்த மந்திரைத்தை திரும்ப திரும்ப சொல்லுவதால் நமக்கு என்ன பலன் ? 
 
 அருள் நிறைந்த மரியே ஜெபத்தில் நாம் மூவொரு இறைவனை மகிமை படுத்துகிறோம் "அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே" என்ற வார்த்தை தந்தையாம் கடவுளிடம் இருந்து வந்த வார்த்தை. இவ்வார்த்தையால் தான் ஆண்டவர் ஏசு கிறிஸ்து இந்த உலகிற்க்கு மனிதனாக தூய ஆவியானவர் வழியாக பிறந்தார். நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு அருள் நிறைந்த ஜெபமும் மூவொரு கடவுளை நினைத்து அவர்களை மகிமைப்படுத்தி புகழ்வதாகும். அருள்நிறை மந்திரத்தின் முதல் பாகத்தை மிகப் பரிசுத்த திரித்துவ தேவன் நமக்கு வெளிப்பபடுத்தினார். அதன் பிந்திய பாகத்தை அர்ச். எலிசபெத் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு உரைத்தார்கள் . இம்மந்திரத்தின் முடிவுரையை 430-ம் ஆண்டில் திருச்சபை நமக்குத் தந்தது. வேத சாட்சிகளுக்கு தளராத உறுதியையும் பலத்தையும் அளிப்பது இம்மங்கள வார்த்தை ஜெபமே. இதுவே பசாசுக்களுக்கு அச்சம் விளைத்து அவர்களை வெட்கத்துக்குட்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது. 
 
அருள் நிறை மந்திரத்தை நாம் தகுந்தவாறு ஜெபிப்போமானால் , அதுவே நாம் சேசுவையும், மரியாயையும் நேசித்து வாழ்த்தி மகிமைப்படுத்துவ தாகுமல்லவா?
 
 ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் நாம் சேசுவையும் மரியாயையும் வாழ்த்துகிறோம்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே என்று கூறுகிறோம்.அருள் நிறை மந்திரத்தால் நாம் மரியன்னையை வாழ்த்தும்போது அவ்வன்னை அருள் வரங்களால் நம்மை நிரப்புகிறார்கள் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். மாமரி அன்னையின் வாழ்த்தொலி எலிசபெத்தின் காதில் ஒலித்த போது அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அவர்கள் உதரத்திலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளிற்று. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட அர்ச் எலிசபெத்து போல் நாமும் இந்த வாழ்த்துரை ஜெபிக்கும் போதெல்லாம் ஆட்கொள்ளப்படுவோம் . இத்தகைய அற்புதமான ஜெபமாலை ஜெபித்து நாம் முழு பலனை அடைவோம். 
 

 

ஒரு நாளும் நமது மாதா அம்மாவை மறக்க வேண்டாம். ஜெபமாலை ஜெபிக்காமல் இருக்க வேண்டாம். 

 

 முழு ஜெபமாலை ஜெபிப்போம். நம்மையே இந்த கொடிய உலக ஆசையில் இருந்து சாத்தானின் சோதனையில் இருந்து காத்துக்கொள்வோம் மாதா அம்மா வழியாக ஏசுவுக்கு நம்மையும் நம் குடும்பங்களையும் ஒப்பு கொடுப்போம் . யேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க !

Comments

Popular posts from this blog

நற்கருணை தயாரிப்பு - பத்து பாவங்கள்

  நமது கத்தோலிக்க விசுவாசத்தின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நற்கருணையில் உயிருடன் திருப்பலியில் எழுந்து வருகிறார் . எவ்வளவு பரிசுத்த தன்மையுடன் நாம் நற்கருணை நாதரை வாங்க வேண்டும் . தகுந்த முன் தயாரிப்புடன் நற்கருணைப் பெற்று கொள்வோம் . இந்த பின்வரும் பத்து பாவங்களை செய்திருந்தால் பாவமன்னிப்பு பெறாமல் நற்கருணை பெற வேண்டாம் . சரியான காரணமின்றி ஓய்வு நாள் திருப்பலி தவறவிட்டால் அல்லது தகுந்த காரணம் இல்லாமல் கடன் திருப்பலி காணாமல் இருந்தால் திருமணத்திற்கு வெளியே ( விபச்சாரம் ), உங்களுடன் ( சுயஇன்பம் ) அல்லது திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் ( திருமணத்திற்கு முந்தைய ) உடலுறவு கொண்டிருந்தால் நற்கருணை இழிவுபடுத்தப்பட்டது ஒரு வருடத்தில் ஒரு முறை கூட குருவிடம் சென்று பாவமன்னிப்பு பெறவில்லை ( இது ஒரு கத்தோலிக்கருக்கு குறைந்தபட்ச தேவை ) பயன்படுத்தப்பட்ட செயற்கை பிறப்பு கட்டுப்பாடு - ஆணுறைகள் , மாத்திரைகள் , திட்டுகள் போன்றவை . கருக்கலைப்பு அல்லது கருவின் எந்தவொரு அழிவுடனும் எந்த வகையிலும் நிதியுதவி அல்லது உதவி செய்திருந்தால் ...

பதுவை நகர அந்தோனியார் பேராலயம் , பதுவை, இத்தாலி

  பதுவை நகர அந்தோனியார் பேராலயம் | பதுவை இத்தாலி | St Anthony Basilica | Italy பதுவைப் ஊரில் புதுமைகள் செய்து நல்லுரையாற்றி , தவறினை சுட்டிக்காட்டி ஞான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அந்தோனியார் . தாயகம் போர்ச்சுக்கல் பிறந்த ஊர் லிஸ்பன் சேர்ந்தது அகஸ்தீனார் மடம் புகுந்தது கப்பூச்சின் சபை விரும்பியது வேத சாட்சியாக ஆனது மறை போதகராக உரிமை கொண்டாடியது பதுவை மாநகர் இவை யாவும் தேவ திருவுளம் . அவர் பதுவா நகரில் மூன்று ஆண்டுகளே திருத்தொண்டாற்றினார் . பதுவா நகர் அவரால் அனைத்துலகப் புகழ் பெற்றது . அந்தோனியார் கடைசி கால கட்டத்தில் ' நான் இங்குள்ள சகோதரர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை பதுவை தூய மரியன்னை மடம் செல்ல விரும்புகிறேன் '' என்றார் . சகோதரர்கள் உடன்படவில்லை . அவரின் அடுத்தடுத்த விண்ணப்பம் அவர்களை உடன்பட வைத்தது . ஒரு வண்டியில் ஏற்றி பதுவா ஊரை நோக்கி விரைந்தனர் . 1231 - ஆம் வருடம் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் நிகழ்ந்தது . அன்று அவருக்கு வயது 36. அந்தோனியார் இறபதற்கு முன்னால் பதுவை நகரச் சிறுவர்களின் வாய்களைத் திறந்தார் , அவர்கள் வீதிகளில் அங்குமிங்கும் ஓடி ,...

அற்புத அகுஸ்தினார் குழந்தை இயேசு - ஜெர்மனி

ஜெர்மன் நாட்டில் இருக்கிற முனிச் நகரத்தில் மட்டும் ஒரு சிறப்பான பெரிய குழந்தை இயேசு சொரூபம் இருக்கு . அந்தக் குழந்தை இயேசுவை ஒவ்வொரு தடவையும் கிறிஸ்மஸ் அப்பதான் வெளியே எடுத்து வைப்பாங்க . அந்த அதிசய குழந்தை இயேசுவை பற்றி தான் பார்க்கப் போறோம் . இந்த குழந்தை இயேசு சிறப்பும் 1624 அகுஸ்தினார் சபை காரங்க வைத்திருந்த சொரூபம் . அகுஸ்தினார் சபையில் இருந்த குரு ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தை இயேசுவே இரவு எடுத்து கையில் வைத்து தாலாட்டி ஜெபம் பண்ணுவார் . இப்படி யாருக்கும் தெரியாமல் அவர் செஞ்சுகிட்டு வந்தாரு . அப்படி ஒரு நாளு அந்த சொரூபம் தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது அந்த குருவானவர் அந்த உடைந்த துண்டுகளை உள்ள வச்சுட்டு கடவுளிடம் ஜெபம் பண்ணினார் . எப்படியாவது இந்த சொரூபம் திரும்ப பழையபடி வந்துடனும் கடவுளே என்று ஜெபம் பண்ணினார் . கிறிஸ்துமஸ் சமயம் நெருங்கி வந்ததால் சபையில இருக்கிற குருக்கள் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்யணும் . அப்ப அந்த குருவானவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பாவசங்கீர்த்தனம்தில் சொன்னாரு . உடனே குருக்கள் போயி அந்த சொரூபத்தை திறந...