புனித சுசையப்பர் அகில திருசபைக்கு பாதுகாவலராக நூற்றி ஐம்பதாவது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார். 1870 ம் ஆண்டு முத்தி பேறுபெற்ற போப் ஒன்பதாம் பியூஸ் அவர்கள் அறிவித்தார்கள். இதை நினைவுகூறும் விதமாக போப் பிரான்சிஸ் இந்த வருடத்தை 2021 புனித சூசையப்பர் வருடமாக அறிவித்துள்ளார்.
போப் குறிப்பிடும் பொது ‘சூசையப்பர் ஒரு அன்பான தந்தை பணிவுள்ள தந்தை அன்புள்ள தந்தை , முக்கியமான பங்கு வகித்தவர் நம் யேசுவின் வாழ்வில்’ என்று சொல்கின்றார்.
இறைவன், தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும், அருளையும், ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார். தூய .மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு, வானுலகிலும் பூவுலகிலும், யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும், தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து, தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார். அவர் பொறுமை, நம்பிக்கை, விசுவாசம், இறைஅன்பு, பணிவு ஆகிய நற்குணங்களைக்கொண்டு வாழ்ந்தார். அதனால் அவரை இறைவன் தூயவர்களை விடவும் மேலாக உயர்த்தினார். இதன்மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நம்மை இறைவன் என்றென்றும் அன்புசெய்து வான்வீட்டைத் தருவதற்காக படைத்தார் என்பதுதான். அவர் கிறிஸ்தவர்களல்லாதோரையும் தம் அருளால் கிறிஸ்தவர்களாக்கினார். இறைவன் சகல வரங்களையும் அளித்து திருச்சபையை நிலைநிறுத்தி அருட்சாதனங்கள் வழியாக தம் அருங்கொடைகளை அளித்து வருகிறார்.
நாம் இந்த சூசையப்பர் ஆண்டில் அவரது பண்பு நலன்களை பின்பற்றுவோம். சூசையப்பர் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய புனிதர். ஒரு குடும்ப தந்தையாக இருந்து புனிதராவது எப்படி என அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். புனித சூசையப்பர் கடவுள் சித்ததை நிறைவேற்றி அவரது கீழ்ப்படித்தல் பண்பினால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
தூய மரியன்னையின் கணவரான புனித சூசையப்பரே வாழ்க! இயேசுவின் அன்புத் தந்தையாகிய புனித சூசையப்பரே வாழ்க! இறைவனின் அதிகாரத்தை செயல்படுத்தத் தெரிந்துகொள்ளப்பட்ட புனித சூசையப்பரே வாழ்க!


Comments
Post a Comment