Skip to main content

Posts

வத்திக்கான் - புனித பேதுரு பேராலயம்

  புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும் . இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் " பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி " (Basilica Sancti Petri) என்றும் , இத்தாலிய மொழியில் " பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ " (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும் . உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே . உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர் . கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு . இப்பேராலயத்தின் கீழ்ப் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது . சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும் , உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு . எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார் . புனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்க...
Recent posts

அற்புத அகுஸ்தினார் குழந்தை இயேசு - ஜெர்மனி

ஜெர்மன் நாட்டில் இருக்கிற முனிச் நகரத்தில் மட்டும் ஒரு சிறப்பான பெரிய குழந்தை இயேசு சொரூபம் இருக்கு . அந்தக் குழந்தை இயேசுவை ஒவ்வொரு தடவையும் கிறிஸ்மஸ் அப்பதான் வெளியே எடுத்து வைப்பாங்க . அந்த அதிசய குழந்தை இயேசுவை பற்றி தான் பார்க்கப் போறோம் . இந்த குழந்தை இயேசு சிறப்பும் 1624 அகுஸ்தினார் சபை காரங்க வைத்திருந்த சொரூபம் . அகுஸ்தினார் சபையில் இருந்த குரு ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தை இயேசுவே இரவு எடுத்து கையில் வைத்து தாலாட்டி ஜெபம் பண்ணுவார் . இப்படி யாருக்கும் தெரியாமல் அவர் செஞ்சுகிட்டு வந்தாரு . அப்படி ஒரு நாளு அந்த சொரூபம் தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது அந்த குருவானவர் அந்த உடைந்த துண்டுகளை உள்ள வச்சுட்டு கடவுளிடம் ஜெபம் பண்ணினார் . எப்படியாவது இந்த சொரூபம் திரும்ப பழையபடி வந்துடனும் கடவுளே என்று ஜெபம் பண்ணினார் . கிறிஸ்துமஸ் சமயம் நெருங்கி வந்ததால் சபையில இருக்கிற குருக்கள் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்யணும் . அப்ப அந்த குருவானவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பாவசங்கீர்த்தனம்தில் சொன்னாரு . உடனே குருக்கள் போயி அந்த சொரூபத்தை திறந...

பதுவை நகர அந்தோனியார் பேராலயம் , பதுவை, இத்தாலி

  பதுவை நகர அந்தோனியார் பேராலயம் | பதுவை இத்தாலி | St Anthony Basilica | Italy பதுவைப் ஊரில் புதுமைகள் செய்து நல்லுரையாற்றி , தவறினை சுட்டிக்காட்டி ஞான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அந்தோனியார் . தாயகம் போர்ச்சுக்கல் பிறந்த ஊர் லிஸ்பன் சேர்ந்தது அகஸ்தீனார் மடம் புகுந்தது கப்பூச்சின் சபை விரும்பியது வேத சாட்சியாக ஆனது மறை போதகராக உரிமை கொண்டாடியது பதுவை மாநகர் இவை யாவும் தேவ திருவுளம் . அவர் பதுவா நகரில் மூன்று ஆண்டுகளே திருத்தொண்டாற்றினார் . பதுவா நகர் அவரால் அனைத்துலகப் புகழ் பெற்றது . அந்தோனியார் கடைசி கால கட்டத்தில் ' நான் இங்குள்ள சகோதரர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை பதுவை தூய மரியன்னை மடம் செல்ல விரும்புகிறேன் '' என்றார் . சகோதரர்கள் உடன்படவில்லை . அவரின் அடுத்தடுத்த விண்ணப்பம் அவர்களை உடன்பட வைத்தது . ஒரு வண்டியில் ஏற்றி பதுவா ஊரை நோக்கி விரைந்தனர் . 1231 - ஆம் வருடம் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் நிகழ்ந்தது . அன்று அவருக்கு வயது 36. அந்தோனியார் இறபதற்கு முன்னால் பதுவை நகரச் சிறுவர்களின் வாய்களைத் திறந்தார் , அவர்கள் வீதிகளில் அங்குமிங்கும் ஓடி ,...

சூசையப்பர் ஆண்டு 2021

  புனித சுசையப்பர் அகில திருசபைக்கு பாதுகாவலராக நூற்றி ஐம்பதாவது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார் . 1870 ம் ஆண்டு முத்தி பேறுபெற்ற போப் ஒன்பதாம் பியூஸ் அவர்கள் அறிவித்தார்கள் . இதை நினைவுகூறும் விதமாக போப் பிரான்சிஸ் இந்த வருடத்தை 2021 புனித சூசையப்பர் வருடமாக அறிவித்துள்ளார் . போப் குறிப்பிடும் பொது ‘சூசையப்பர் ஒரு அன்பான தந்தை பணிவுள்ள தந்தை அன்புள்ள தந்தை , முக்கியமான பங்கு வகித்தவர் நம் யேசுவின் வாழ்வில்’ என்று சொல்கின்றார் . இறைவன் , தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும் , அருளையும் , ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார் . தூய . மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு , வானுலகிலும் பூவுலகிலும் , யாருக்கும் வழங்கப்படவில்லை . அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும் , தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர் . புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து , தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார் . அவர் பொறுமை , நம்பிக்கை , விசுவாசம் , இறைஅன்பு , பணிவு ஆகிய நற்...

நற்கருணை தயாரிப்பு - பத்து பாவங்கள்

  நமது கத்தோலிக்க விசுவாசத்தின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நற்கருணையில் உயிருடன் திருப்பலியில் எழுந்து வருகிறார் . எவ்வளவு பரிசுத்த தன்மையுடன் நாம் நற்கருணை நாதரை வாங்க வேண்டும் . தகுந்த முன் தயாரிப்புடன் நற்கருணைப் பெற்று கொள்வோம் . இந்த பின்வரும் பத்து பாவங்களை செய்திருந்தால் பாவமன்னிப்பு பெறாமல் நற்கருணை பெற வேண்டாம் . சரியான காரணமின்றி ஓய்வு நாள் திருப்பலி தவறவிட்டால் அல்லது தகுந்த காரணம் இல்லாமல் கடன் திருப்பலி காணாமல் இருந்தால் திருமணத்திற்கு வெளியே ( விபச்சாரம் ), உங்களுடன் ( சுயஇன்பம் ) அல்லது திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் ( திருமணத்திற்கு முந்தைய ) உடலுறவு கொண்டிருந்தால் நற்கருணை இழிவுபடுத்தப்பட்டது ஒரு வருடத்தில் ஒரு முறை கூட குருவிடம் சென்று பாவமன்னிப்பு பெறவில்லை ( இது ஒரு கத்தோலிக்கருக்கு குறைந்தபட்ச தேவை ) பயன்படுத்தப்பட்ட செயற்கை பிறப்பு கட்டுப்பாடு - ஆணுறைகள் , மாத்திரைகள் , திட்டுகள் போன்றவை . கருக்கலைப்பு அல்லது கருவின் எந்தவொரு அழிவுடனும் எந்த வகையிலும் நிதியுதவி அல்லது உதவி செய்திருந்தால் ...

ஜெபமாலை ஜெபிப்போம் - பாகம் 1

மாதாஅம்மா     ஜெபமாலை ஜெபிப்போம்.  இந்த உலகத்தில் திருப்பலிக்கு அடுத்து மிகவும் உன்னதமான ஜெபம் ஜெபமாலை ஆகும். ஜெபமாலை ஜெபிக்க பட வேண்டும்.ஜெபமாலை சொல்லப்பட கூடாது . முழு கவனத்தோடு முடித்தவரை மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் .பக்தியுடன் சொல்லப்படும் ஒரு அருள் நிறைந்த மந்திரத்தால் இந்த உலகையே மாற்றலாம் என்று புனிதர்கள் கூறுகிறார்கள்.முடிந்த வரை பய பக்தியுடன் ஜெபமாலை ஜெபிப்போம். ஜெபமாலை தொடங்கும் முன் தூய ஆவி ஆண்டவர் ஜெபம் ஜெபித்த பின்னர் ஆரம்பிக்கவேண்டும் . பக்தியுடன் ஜெபிக்க புனிதர்கள் மற்றும் காவல் சம்மனசானவரின் உதைவியை கேட்க வேண்டும் .    நம்முடைய பாரம்பரிய முறை படி 153 மணி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.இப்பொது நமக்கு ஒளியின் மறை உண்மைகளும் ஜெபமாலையில் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் சேர்க்கப்பட்டுள்ளது . அதையும் நாம் சேர்த்து ஜெபிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும் 53 மணி ஜெபமாலை மிகவும் சிறிய பலனை தரும். முழு ஜெபமாலை ஜெபிக்கும் போது நமக்கு முழு பலன் கிடைக்கும். இந்த உலகத்தில் சாத்தானின் சோதனைகளை மேற்கொள்ள நமக்கு முழு ஜெபமாலை தான் பலன் கொடுக்கும். பு...